வல்வையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள, ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்த நீச்சல் தடாகத்தை அமைக்கும் சம்பந்தாமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 26 ஆம் திகதி யாழ் அரச அதிபர் பணிமனையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டிருந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய செயலகம் ஒன்று முதன்முறையாக வெளிமாவட்டமான யாழ்ப்பாணத்தில் கடந்த 26 ஆம் திகதி யாழின் திறந்து வைக்கப்பட்ட பின்னரே குறித்த இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் யாழ் அரச அதிபர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ் சுங்க இலாகாப் பணிப்பாளர், வட மாகாண இராணுவ கட்டளைத் தளபதி, யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், பருத்தித்துறை பிரதேசசபைத் தலைவர், வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலர் திரு.பிரசாத், வட மாகாண விளையாட்டுத் துறை பணிப்பாளர், யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் ஆழிகுமரன் ஆனந்தன் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.