தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (National youth services council) யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி யாழ் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் பே.சுபாகர் தலமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடமராட்சி கிழக்கின் சிறந்த இளைஞனுக்கான விருதை அம்பனைச் சேர்ந்த உ.நிதர்சன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனதிரசாவும், சிறப்பு அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், விந்தன், கஜதீபன், பரஞ்சோதி மற்றும் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி இயக்குனர் தபேந்திரன் மற்றும் யாழ் மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் அனைத்து பிரதேச இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.