வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருக்கோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தேவகிஅம்மா வேலும்மயிலும் 06.05.2017 (சனிக்கிழமை) அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு/திருமதி வே.வயித்திலிங்கம் தம்பதிகளின் இளைய மகளும்,
திரு.வ.வேலுமயிலும் (முன்னாள் உதவிஅரசாங்க அதிபர் - பருத்தித்துறை, முன்னாள் பிரதேச செயலாளர் - திருக்கோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி மலர் சந்திரலிங்கம் (பிரான்ஸ்), முரளி (கனடா), கலைவாணி பிறேம்குமார் (கனடா), குமுதினி கஜேந்திரன் (பிரதம கணக்காளர், வடமாகாண திறைசேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திரு.இ.சங்கரலிங்கம்(பிரான்ஸ்), திருமதி வனிதா முரளி (கனடா), திரு.கி.பிறேம்குமார்(கனடா) மற்றும் திரு.சி.கஜேந்திரன் (பிரதம கணக்காளர், வடமாகாண சுகாதார அமைச்சு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கணேஸ், மிர்ணாளினி, ஹரிஹரன், அனன்யன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மானாங்கானை, நெடியகாடு, பொலிகண்டி, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் 08.05.2017 (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலினை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
வெ.கார்த்திகேயன் (London U.K.)
Posted Date: May 08, 2017 at 05:31
ஆத்மசாந்திக்கு எங்கள் பிரார்த்தனைகள் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.