வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகத்திற்கென வல்வை மானாங்கானை பகுதியில் புதிய மைதானம் ஒன்று (வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானம்) இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
வல்வை விளையாட்டுக்கழகத்தின் மூத்த தலைவர் திரு.மு.தங்கவேல் அவர்களும், வல்வை விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு.மு.பிரேம் குமார் அவர்களும் மைதானத்தின் பெயர் பலகையினை திரை நீக்கம் செய்து உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து இளங்கதிர் விளையாட்டுக்க்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் ஒருநாள் (One day) உதைப்பந்தாட்ட போட்டிகள் புதிய மைதானத்தில் ஆரம்பமாகி தற்பொழுது நடைபெற்றுக் கிண்டிருக்கின்றது.
முதலாவது போட்டியில் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் ரேவடி வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை சைநின்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது . இந்த ஆட்டத்தில் உதயசூரியன் வெற்றி பெற்றது.
தொடர்ந்தும் ஆட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இப்போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.