21 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்துப் பயிற்சி ஆரம்பித்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/10/2016 (திங்கட்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகத்தினால் கடந்த வாரம் நடாத்தப்பட்ட 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சிகள் நேற்று உத்தியோக பூர்வமாக வல்வை பொது விளையாட்டரங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
வல்வை விளையாட்டுக்கழக முன்னாள் தலைவர் திரு.மு.தங்கவேல் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், வல்வை விளையாட்டுக்கழக தலைவர் பிறேம்குமார், உபதலைவர் சண்முகம், போராசிரியர் இராஜேந்திரன், கப்டன் சிவநேசன், சிதம்பர கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் முரளி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் பருத்தித்துறை உதைபந்தாட்ட சங்கத்தின் செலாளர் திரு அருளானந்த சோதி அவர்கள் பயிற்சி முகாமை ஆரம்பித்து வைத்தார்.
பயிற்சி வழங்குவதற்காக பயிற்றுவிப்பாளர்கள் பருத்தித்துறை உதைபந்தாட்ட சங்கத்திலிருந்து வருகை தந்த்திருந்தார்கள். தொடர்ந்து பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. கடந்த வாரம் கரப்பந்தாட்ட பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.