வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவகால அறிவித்தல்
வரலாற்றுச்சிறப்பு மிக்க இவ்வாலயத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் வகையிலும் ஆலய சூழலை சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதுடன் உற்சவகால ஒழுங்கு முறைகளை பின்பற்றி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
• ஆலய வீதிகளை சுத்தமாக பேணவும்
• கழிவுப்பொருட்களை அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போடவும்
• ஆலய சுற்று வீதிகளில் வியாபார செயற்பாடுகள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது
• ஆலயத்திற்கு வரும் பிரதான வீதியின் (கிழக்கு) வீதியோரங்களில் வியாபாரம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே வியாபார செயற்பாடுகள் அனுமதிக்கப்படும்
• வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் நகராட்சி மன்ற உற்சவகால பணிமனையில் தொடர்புகொண்டு உரிய அனுமதியினை பெற்றுக்கொள்ளவும்
• நகராட்சி மன்றத்தில் பதிவுசெய்த வியாபாரிகளுக்கு மட்டும், ஆதன உரிமையாளர்கள் வியாபார நிலையத்திற்கான இடங்களை வழங்கவும் பதிவுசெய்யாத வியாபாரிகளின் விபரங்களை நகராட்சி மன்றத்திற்கு உடனடியாக அறியத்தரவும்
• அனுமதியற்ற வியாபர நிலையங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் நகராட்சி மன்றத்தினால் முன்னெடுக்கப்படும்
• ஆலயத்திற்கு வரும் பிரதான வீதிகளின் வீதியோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது
• வியாபாரிகள் தங்களது பொருட்களை ஏற்றியிறக்க பி.ப 1:00 தொடக்கம் பி.ப 3:00 வரையிலும் இரவு 10:30 இற்கு பின்னரும் வீதித்தடையினூடாக வாகனங்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர்
• ஆலய சூழலில் பொலித்தீன் பாவனை தவிர்க்கப்பட்டுள்ளது
• பொதுச்சுகாதாரத்திற்கு பாதகமான சகல செயற்பாடுகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
• பொதுமலசல கூடங்களை பயன்படுத்துவதுடன் அவற்றை சுத்தமாக பேணவும்
• ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களும் ஆலய சூழலில் வசிப்பவர்களும் வியாபாரிகளும் பொதுமக்களும் ஆலயத்தில் சேவையிலீடுபடும் நகராட்சி மன்ற ஊழியர்களுடனும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடனும் நட்புடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்
ச.பிரசாத் செயலாளர் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.