எமது இணையதளத்தின் வளர்ச்சியில் பலரின் பங்களிப்பு இருந்து வருகின்றபோதிலும் எமது புகைப்படப்பிடிப்பாளரின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதொன்றாகும். வல்வெட்டித்துறைச் சேர்ந்த செல்வன் பிரசாந்த் கடந்த 3 வருடங்களாக எமது இணையதளத்திற்காக புகைபடப்பிடிப்பனை மேற்கொண்டு வருகின்றார்.
தினமும் நூற்றுக் கணக்கானோர் பார்வையிடும் ஏராளாமான புகைப் படத்தைப் பிடித்துவரும் எமது புகைப்படப் பிடிப்பாளரை நீங்களும் அறிந்திருக்க வேண்டுமல்லவா.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
ஞா. மனோகரன் (ஐக்கிய ராஜ்ஜியம்)
Posted Date: February 02, 2017 at 00:25
உதாரணத்திற்கு மிகவும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொள்வோமாக இருந்தால் சிலவேளைகளில் அந்தப்படத்தின் கதை, நடிப்பு, பாடல் போன்ற மற்ற விஷயங்கள் தரம்குறைந்தவைகளாகக்காணப்படும்.
ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் அற்புதமாக அமைந்திருக்கும். இது அந்தப்படத்தின் காட்சிகளை மிகவும் அழகாக படம்பிடித்த கமேரா கலைஞரையே சாரும்.
தனிஒரு மனிதரான அந்தக்கமேரா கலைஞரின் தனித்திறமையினாலேயே அந்தப்படம் இமாலய வெற்றியை பெற்றிருக்கும்.
.
இந்த உதாரணம் தொலைக்காட்சி, இணையத்தளம், முகநூல் போன்ற ஊடகங்களுக்கும் பொருந்தும்.
ஒரு இணையத்தளம் எவ்வளவுதான் சிறப்பாக செய்திகளை வெளியிட்டாலும் அந்தச்செய்திகளுடன் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் அழகானவைகளாக அமையாவிட்டால் அந்தச்செய்திகள் ஒருபோதும் வாசகர்களின் மனதை ஈர்க்காது.
எமது வல்வெட்டித்துறை.org இணையத்தளம் இன்று தமிழ் இணையத்தளங்களிலேயே மிகவும் தரம்வாய்ந்ததாக உயர்ந்துநிற்பதற்கு உரிய முக்கிய காரணங்களில் எமது இணையத்தளதில் வெளிவரும் புகைப்படங்களும் ஒன்றாகும்.
.
அந்தவகையில் எமது புகைப்படக்கலைஞர் செல்வன் பிரசாந்த்தின் பங்களிப்பு என்பது மிகவும் காத்திரமாது.
எமது வல்வெட்டித்துறை.orgயை புதுப்பொலிவும் மெருகும் பளபளப்பும் பெறச்செய்து முதலிடத்துக்கு இட்டுச்சென்ற செல்வன் பிரசாந்த்திற்கு மிக்க நன்றிகள்.
தனது புகைப்படத்துறையில் மேலும் பல சாதனங்களை படைத்து எமது ஈழமணித்திருநாட்டின் புகழ்பூத்த புகைப்படகலைஞர் பாலுமகேந்திராவைப்போல் எமது செல்வன் பிரசாந்த்தும் புகழ்பெறவேண்டுமேன எமது எல்லாம்வல்ல வல்வை நெடியகாட்டுப்பிள்ளையாரப்பனை வேண்டி எமது செல்வன் பிரசாந்த்தை வாழ்த்துகிறேன்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.