கணபதி பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டுப்போட்டி நிறைவு - (முழுப்படத் தொகுப்பும் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/05/2014 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிற்பகல் 02.30 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் (தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக திருமதி கலைச்செல்வி திலீபன் (மாவட்ட வைத்திய அதிகாரி -மாவட்ட வைத்தியசாலை வல்வெட்டித்துறை)அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.இ. தேவகுரு (முன்னாள் தலைவர் கணபதி படிப்பகம்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
பாலகர்களின் விளையாட்டுக்கள், இசையும் அசைவும், பழைய மாணவர்களின் ஓட்டம், வினோத உடைப்போட்டி, மத்தியஸ்தர்களுக்கான நிகழ்ச்சி என பல நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
இந்த நிகழ்விற்கு மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அதிலும் குறிப்பாக பெண்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் நிகழ்வுகளின் முழுத் தொகுப்பினை கீழேயுள்ள படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.