யாழ் பல்கலைக் கழக மூன்றாம் வருட சந்தைபடுத்தல்துறை மாணவர்கள் வல்வைக்கு சுற்றுலா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2014 (வெள்ளிக்கிழமை)
யாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட சந்தைபடுத்தல்துறை (marketing department) மாணவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதன் தொடர்ச்சியாக இவர்கள் நேற்று வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்து வல்வெட்டித்துறை மற்றும் தொண்டமானாறு பிரதேசங்களில் அமைந்துள்ள செல்வசந்நிதி முருகன் ஆலயம், தொண்டமானாறு பெரிய கடற்கரை, புதிதாக அமைக்கப்பட்ட ரேவடி விளையாட்டுக்கழக மைதானம், வல்வை பொது விளையாட்டு அரங்கம் போன்ற பல இடங்களையும் பார்வையிட்டிருந்தனர்.
கடந்த வருடமும் யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் (Management Faculty) வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.