சுவிற்சர்லாந்து நாட்டின் பேர்ண் மாநிலத்தில் உள்ள தூண் நகர நகராட்சித் தேர்தலில் தமிழ்ப் பெண்மணி ஒருவர் போட்டியிடுகின்றார். சுவிற்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதாகக் கூறப்படும் சோசலிசக் கட்சியின் சார்பிலேயே திருமதி தர்சிக்கா கிருஸ்ணாணந்தம் அவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
கணக்காளராகப் பயின்று பட்டம் பெற்ற தர்சிக்கா ஒரு தொழில்முறை மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கி வருகின்றார். அதேவேளை, தூண் நகரசபையில் இந்துமதம் மற்றும் தமிழர் கலாசாரம் என்பவற்றுக்கான ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
நவம்பர் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தூண் நகரசபைக்காக 40 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இவர் சார்ந்த சோசலிசக் கட்சி சார்பில் கடந்த தேர்தலில் 8 உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தனர். இந்தத் தேர்தலில் சுவிஸ் பிரஜா உரிமை பெற்றவர்களும் 'சீ" ரக வதிவிட உரிமை பெற்றவர்களும் வாக்களிக்க முடியும் ஆகையால் இந்த நகரப் பிரதேசத்தில் வாழும் நூற்றுக் கணக்கான தமிழர்கள் வாக்களிக்கும் நிலையில் உள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.