வடமாகாண மர நடுகை மாதம் கார்த்திகை 1 - 30, மரங்களால் சூழப்பெற்ற ஊரிக்காட்டின் நெற்கொழு வைரவர் கோயில் பிரதேசம் (படத் தொகுப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2014 (சனிக்கிழமை)
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு இந்த கார்த்திகை மாதத்தை மர நடுகை மாதமாக அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் இன்றிலிருந்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பல்வேறு இடங்களில் மரங்கள் நடப்படுவதுடன், மரம் வளர்ப்பின் பயன்பற்றிய விழிப்புணர்வையும் மேற்கொள்ளவுள்ளது.
பல இடங்களில் இடைஞ்சல் என கருதி மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு இடங்களின் தோற்றங்களே மாறிவருகின்றன. ஆங்காங்கே அவ்வப்போது மரங்கள் நாட்டப்பட்டு செய்தியாக்கப்பட்டு பராமரிக்காமல் விடப்படுகின்றன.
கீழே படங்களில் வல்வெட்டித்துறையின் ஊரிகாட்டின் நெற்கொழு பிரதேசத்தில், நெற்கொழு வைரவர் ஆலய வளாகத்தைச் சூழவுள்ள பல்வேறு வகையான பல முதிர்ந்த மரங்களைக் காணலாம்.
பல ஆண்டுகளிற்கும் மேலாக மரங்களை இழக்காமல் காட்சியும், செழுமையும், குளிர்ச்சியும் மாறாமல் உள்ள ஒரு சிறு இடமாக இது இன்றும் உள்ளது.
ஆளுக்கொரு மரம் நடுவோம்(அவற்றை பராமரிப்போம்)நாளுக்கொரு வரம் பெறுவோம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.