சுமனின் "முகாரி பாடும் முகங்கள்" எனும் கவிதைத் தொகுப்பு எதிர்வரும் 10 திகதி வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/08/2014 (வியாழக்கிழமை)
வல்வை மு.ஆ.சுமனின் "முகாரி பாடும் முகங்கள்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 03.15 மணிக்கு யா/வல்வை அமெரிக்கன் மிஷன் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு வல்வெட்டித்துறை கலை இலக்கிய மன்ற தலைவர் ச.விஸ்வரூபன் தலைமை தாங்க பிரதம விருந்தினராக திரு.த.ஜெயசீலன் ( பிரதேச செயலாளர் வடமராச்சி வடக்கு, பருத்தித்துறை )அவர்களும் சிறப்பு விருந்தினராக பண்டிதர், சைவப்புலவர் பொன்.சுகந்தன் ( கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம் பருத்தித்துறை ) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். ஆசியுரையினை சிவஸ்ரீ சோமாஸ்கந்த தண்டபாணிகதேசிகர் J.P ( பிரதம குரு வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் ) அவர்களும் வழங்கவுள்ளார்.
"முகாரி பாடும் முகங்கள்" எனும் கவிதைத் தொகுப்பினை பிரதம விருந்தினர் வெளியிட்டு வைக்க கவிதைத் தொகுப்பின் முதற் பிரதியை வல்வையின் எழுத்தாளரும் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளருமாகிய வல்வை.ந.அனந்தராஜ் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.