வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் நேற்றய தினம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சகிதம் இரவு நேர திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது உணவுச்சட்டத்தின் விதிமுறைகளை மீறிய நிலையில் அதாவது
மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை,
தனிநபர் சுகாதாரத்தினை உரிய முறையில் பேணாமை,
திண்மக்கழிவுப் பொருட்களை வெளிச்சூழலிற்கு அப்புறப்படுத்தியமை,
கழிவு நீரினை சுற்றாடலுக்கு வெளியேற்றியமை,
உணவு வளாகத்தினை பதிவு செய்யாமை,
இலையான்கள் பெருகக்கூடிய நிலையில் உணவகத்தினை நடாத்தியமை
உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளிற்கு எதிராக 4 உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.