வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் அதிபர் திரு.சிவநாதன் அவர்கள், அவரது சேவையைப் பாராட்டி இன்று கெளரவிக்கப்பட்டுள்ளார். பிற்பகல் சுமார் 2 மணியளவில் பாண்ட் வாத்தியம் சகிதம் பாடசாலை வீதியிலிருந்து அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கு ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பித்திருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அதிபரின் சேவையைப் பாராட்டி சிறப்புரைகளும் வழங்கப்பட்டிருந்ததுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு வடமாகாணசபை உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
திரு.சிவநாதன் அவர்கள் தற்பொழுது புற்றளை மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.