திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று வல்வெட்டித்துறை பிரதேசத்தில் நாற்றுக்கள், மரக்கறிவகைகள் மற்றும் மரங்கள் என்பன தேர்வு செய்யபட்ட சில வீடுகளில் கையளிக்கப்பட்டு நாற்றப்பட்டன. கிராம சேவையாளர் அலுவலகத்தின் உதவியுடன் நடைபெற்ற இத்திட்டத்தில், மக்கள் விவசாய உற்பத்திகளில் தம்மை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் இத்துறையில் தன்னிறைவு காண்பதற்கு வழிவகைகள் என்பன விளக்கப்பட்டிருந்தன.
நாடு முழுவதிலும் திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தேசிய நிகழ்ச்சித் திட்டம் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சும்,கல்வியமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்களின் பங்களிப்போடு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.