ஆழிக்குமரன் ஆனந்தனின் 30 நினைவு தினம் எதிர்வரும் 6 ஆம்திகதி, சிறப்பு ஆவணம் வெளியாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2014 (சனிக்கிழமை)
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த விவேகானந்தன் செல்வக்குமார் ஆனந்தன் எனப்படும் உலக கின்னச் சாதனை வீரான ஆழிக்குமரன் ஆனந்தனின் 30 வது நினைவு தினம் எதிர்வரும் 6 ஆம் திகதியாகும்.
வல்வை ரேவடிக்கடற்கரையில் 1963 ஆண்டு கோடியாக்கடற்கரைக்கான நீச்சலை, வல்வெட்டித்துறையிலிருந்து பாக்கு நீரினை கோடியாக்கரை வரை நீந்தி சாதனை படைத்தலிருந்து ஆரம்பித்து, 1984 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 6ஆம் திகதி ஆங்கில கால்வாயை நீந்திக் கடக்க முயற்சித்தவரை பல உலக சாதனைகளை மேற்கொண்டிருந்தார்.
இவைகளையொட்டிய திரு.ஆனந்தன் பற்றிய ஆவணம், நாளையும், அதனைத் தொடர்ந்து ஆனந்தனின் 30 ஆவது நினைவு தினமான 6 ஆம் திகதியும், பின்னர் பிரதி சனிக்கிழமைகளிலும் எமது இணையதளத்தில் பிரசுரமாகவுள்ளது.
தொகுப்பும் ஆக்கமும் திரு.வ. ஆ. அதிரூபசிங்கம் மற்றும் எமது இணையத்தள குழுவினர்கள் ஆவார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.