வடமராட்சியில் சேகரிகப்பெற்ற பொருட்கள் மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று கையளிக்கப்படவுள்ளன
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2014 (வியாழக்கிழமை)
வடமராட்சியின் பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமானாறு ஆகிய பிரதேசங்களில் வர்த்தகர் நிறுவனங்களிலிடமிருந்து சேகரிகப்பெற்ற பொருட்கள், மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று கையளிக்கப்படவுள்ளன.
வட மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், சிவயோகன், கரவெட்டி பிரதேச சபைத் தலைவர் வியகேஸ், வல்வை நகரசபை பிரதித் தலைவர் சதீஸ், வல்வை நகரசபை உறுப்பினர் கருணாநந்தராசா, பரம்சோதி, சிவஞானசுந்தரம் மற்றும் ரத்தினம் ஆகியோர் இந்த பொருள் சேகரிப்பில் நேற்றும், நேற்று முன்தினமும் கலந்துகொண்டிருந்தனர்.
பொருட்கள் இன்று மாலை பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாகக் கையளிக்கப்படவுள்ளதாக, பொருள் சேகரிப்பில் ஈடுபட்ட ஒருவர் Valvettithurai.org ற்குத் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.