வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, இன்று வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இன்று இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் ஏழாலை 5 ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து துறையூர் ஐயனார் விளையாட்டுக்கழம் மோதவிருந்தது. போட்டிக்கு துறையூர் ஐயனார் விளையாட்டுக்கழகமானது வருகை தராத காரணத்தினால் ஏழாலை 5 ஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்கு வெற்றி வழங்கப்பட்டது.
தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து, இரணைமாதா நகர் சென்மேரிஸ் விளையாட்டுக்கழகமானது மோதியது. இப்போட்டியில் 1:0 என்ற கோல்கணக்கில் ஜெகமீட்பர் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.
ஜெகமீட்பர் அணிசார்பாக பெறப்பட்ட ஒரு கோலினையும் ஜெனிஸ்ரன் பெற்றுக்கொடுத்தார்.. போட்டியின் ஆட்டநாயகனாக ஜெகமீட்பர் அணியின் பின்கள வீரர் றென்ஷோ தெரிவு செய்யப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.