வல்வை ரேவடி பகுதியில் நூற்றிற்கு மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடி ஸ்ரீ ஞானவைரவர் கோயில் பகுதியில் ஆண்கள் பெண்கள் என நூற்றிற்கு மேற்பட்டோர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். அனுமதிமறுக்கப்பட்டுள்ள இழுவைப்படகு (Trawler) மீன்பிடித் தொழிலை அனுமதிக்ககோரி அல்லது மாற்றீட்டு தொழிலை வழங்கக் கோரியே குறித்த இந்த உண்ணாவிரதத்தை வல்வெட்டித்துறை கிழக்கு கடல் தொழிலாளர் கிராமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதத்தில் வல்வையின் ரேவடி மற்றும் கொத்தியால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் பிள்ளைகள் அவர்களின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
மாகாணசபையே எங்கள் நிலை அறிந்து நீதி தாருங்கள்,
வழிவிடு வழிவிடு மாகாண சபையே விடைகொடு,
மாகாண சபையே எங்கள் நிலையறிந்து நீதி தாருங்கள்,
தென்னிலங்கையில் ஒரு சட்டம் நமக்கு ஒரு சட்டமா
இழுவைப் படகிற்கு அனுமதி வேண்டும் இன்னல்கள் அகன்று வாழ்ந்திட வேண்டும்
இழுவைப் படகிற்கு நிறுத்துவதால் எங்கள் எதிர்காலம் கேள்விக்குறி
அடிக்காதே அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே
போன்ற சுலோக அட்டைகளை உண்ணாவிரத்ததில் ஈடுபட்டவர்கள் தாங்கியவண்ணம் உள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.