வல்வை சிவன் வாலாம்பிகாதேவி மகோற்சவ 6ம் திருவிழா -இரவு(28 படங்கள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 26/07/2014 (சனிக்கிழமை)
வல்வை ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வாலாம்பிகாதேவி மகோற்சவத்தின் 6ம் நாள் இரவு உற்சவம் இன்று நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பித்து பின் சுவாமி உள்வீதிக்கு எழுந்தருளி யாகம் இடம்பெற்று பின் சுவாமி புலி வாகனத்தில் வெளிவீதியுலா வந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நாளை காலை 9 மணிக்கு தேர்க்கால் நாட்டுவதற்காக தேர் அதன் இருப்பிடத்திலிருந்து இழுத்து கொண்டுவந்து விடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அர்த்தஜாம பூசை இடம்பெற்று பின் அடியார்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.