வல்வையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கர்ணன், மயூரன் கைதடி நவீல்ட் பாடசாலையின் உதைபந்தாட்ட போட்டியில் பங்கேற்பு, கர்ணன் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதினைப் பெற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான செல்வன் கர்ணன் நேற்று கைதடி நவீல்ட் பாடசாலையில் (J/Kaithady Nuffield School ) நடைபெற்ற உதைபந்தாட்டயின் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் என்ற விருதினை பெற்றுள்ளார். மேலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இன்னுமொரு மாற்றுத்திறனாளியான செல்வன் மயூரன் ஜெயச்சந்திரனும் இப் போட்டியில் பங்குபற்றி சிறப்பாக விளையாடியுள்ளார்.
நேற்று கைதடியில் நடைபெற்ற குறித்த இந்த உதைபந்தாட்ட போட்டியில் நவீல்ட் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வீரர்களான செல்வன் கர்ணன் மற்றும் மயூரன் தலா 1 கோல்களை பெற்று நவீல்ட் பாடசாலையின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்கள்.
மாற்றுத்திறனாளிகளான செல்வன் கர்ணன் மற்றும் செல்வன் மயூரன் ஆகிய இருவரும் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தற்பொழுதும் சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தைக் கழகத்திற்காக பல போட்டிகளில் பங்கு எடுத்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
SA.PE.RAJKUMAR (CANADA)
Posted Date: November 04, 2014 at 10:00
valamodu vazha vazhththukinrom
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.