Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

10 ஆம் ஆண்டு மாணவர் பாடப்புத்தகத்தில் நவீன கடல் தொழில், ஆனால் எமக்குத் தடை - பாதிக்கப்பட்ட மீனவர்கள்

பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2014 (புதன்கிழமை)

10 ஆம் ஆண்டு மாணவர்களிற்குரிய பாடப்புத்தகத்தில் நவீன கடற்தொழில் பற்றி கூறப்பட்டுள்ள போதிலும்  எமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளதென இழுவைப்படகு தொழில் மறுக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிதுள்ளனர். இது குறித்து குறித்த மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு,

எங்கள் குடும்பங்கள் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். 1974 ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து நோர்வே நாட்டு சீனோர் நிறுவனமே, அந்த இழுவைப்படகு தொழில் முறையை அறிமுகப்படுத்தி இருந்தது.

அன்று தொட்டு இன்று வரை நாம் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். 1983 ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்த காரணத்தால் கடற்தொழில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தோடு பாஸ் நடைமுறையும் அமுல் செய்யப்பட்டிருந்தது.

2002ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பான கச்சேரி முன்றலில் கடற்தொழிலாளர்களின் உண்ணாவிரதப்போராட்டம் 10 நாட்கள் நடைபெற்றது. இப் போராட்டத்தின் மூலம் பல கடற்தொழில் தடைகள் தளர்த்தப்பட்டன.

ஆனாலும் கடற்தொழிலை நம்பி இருக்கும் நாங்கள் பல கஷ்டங்களின் மத்தியில்  இருந்த வண்ணம் உள்ளோம். இப்படி இருக்கும் வேளையில் இழுவைப்படகு தடை தடை செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி, எமது தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாத வண்ணம் எமக்கு பல வழிகளிலும் இடையூறு விளைவித்து வருகின்றனர்.

அதாவது 2010ம் ஆண்டு வர்த்தமானியில் தடை விதித்துள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால், வர்த்த மானியில் இயந்திர நுட்ப இழுவைப் படகு மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நாம் எமது வலுவை மட்டுமே பிரயோகித்து இலுவைப்படகுத் தொழிலை செய்து வருகின்றோம்.

இத் தொழில் தடைசெய்ப்பட்டதல்ல. இது இப்படி இருக்கும் பட்சத்தில் இலங்கையில் பலவகையான மீன்பிடித்தொழில்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி தடைசெய்யப்பட்டுள்ள கடல் தொழிலைத் தடுக்க நடவடிக்கைகள் இதுவரை காலமும் எடுக்கப்படவில்லை.

ஆனால், தடைவிதிக்கப்படாத எங்கள் தொழிலை மாத்திரமே குறிவைத்து இடையூறு விளைவிப்பவர்கள் கடற்படையைக் கொண்டு எமது இலுவைப்படகுகளை பிடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் எமது குடும்பங்கள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாமல், நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பசி, பட்டினி படிக்கும் மாணவர்களின் படிப்பு அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ளோம்.

அத்தோடு தென்னிலங்கையிலும் மன்னாரிலும் இழுவைப்படகுத் தொழில் செய்வதற்கு அனுமதித்துள்ளனர். இன்றுவரை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

அத்தோடு தென்னிலங்கை மீனவர்கள் வடபகுதிக் கடலில் ஊடுருவி கடல் அட்டை பிடித்தல் மற்றும் சட்ட விரோதமான கடற் தொழில்கள் அனைத்தும் செய்துவருகின்றனர்.

கொக்கிளாய் மற்றும் நாயாறு ஆகிய பகுதிகளில் 170 தென்னிலங்கை கடற் தொழிலாளர்களிற்கு இடங்கள் (பாடுகள்) உள்ளன. ஆனால் 400 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் சட்ட விரோதமாகத் தங்கி, தடை செய்த தொழில்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

வடபகுதி கடலில் மனிதவலுவினால் இயக்கப்படும் இழுவைப் படகுகளினால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை.

வேண்டுமென்றால் நாரா, நெட்டா போன்ற கடற்தொழில் ஆராச்சி அமைப்புக்களைக் கொண்டு வடமாகாண சபை ஆய்வுசெய்து பார்க்க நடவடிக்கை எடுத்தால் இழுவைப்படகு தொழிலாளர்களாகிய நாம் ஆய்வுக்கு எமது படகுகளை இலவசமாக கொடுத்து உதவுவதுடன் முழு ஓத்துழப்பையும் தரத்  தயாராகவுள்ளோம்.

இழுவைப்படகுகளால் சிறு தொழிழ்களைச் செய்யும் கடல் தொழிலாளர்களிற்கு இடையூறுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதிலும் உண்மையில்லை. நாம் 6 மாதங்களிற்கு மட்டுமே இழுவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம்.

மேலும் சிறு தொழலாளர்கள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக இரவு நேரங்களில் இழுவைத் தொழிலில் ஈடுபடுவது இல்லை. அதாவது காலை 6 மணி தொடக்கம் மாலை 3 மணி வரையுமே (பகலில்) தொழில் ஈடுபட்டு வந்தோம்.

இந்தியாவில் கடல் வளத்தை பாதுகாக்க மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் 45 நாட்கள் கடல் தொழில் செய்ய தடைவிதிக்கப்ப்ட்டுள்ளது. இங்கு அவ்வாறான நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை.

10 ஆம் ஆண்டு மாணவர்களிற்கான பாடப்புத்தகத்தில் நவீன கடல் தொழில் முறைகள் என்ற தலைப்பில் இழுவைப்படகுத் தொழில் படத்துடன் குறிக்கப்பட்டுள்ளது.

குறித்த இழுவைப் படகுத் தொழிலுக்கு உள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எமது தொழிலையும் சுதந்திரமாக எம்மை செய்ய அனுமதிக்குமாறும் கோரி நேற்று முன்தினம் (06.10.2014) காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் உள்ள ஞான வைரவர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரத்ப் போராட்டம் ஒன்றை எமது குடும்பங்கள் சகிதம் நாம் மேற்கொண்டோம்.

மேலும் இம்மாதம் 9 ஆம் திகதி அதாவது நாளை கைதடியில் உள்ள மாகாணசபை முன்றலில் காலை 8 மணி தொடக்கம் ஆர்பாட்டம் ஒன்றையும் நடத்த தீர்மானித்துள்ளோம்.

அப்பிரச்ச்னைக்கு தீர்வுகாண வட மாகாண முதலமைச்சர், வட மாகாண மீன் பிடி அமைச்சர், வட மாகாண சபை உறுப்பின்றாகள், கடற் தொழில் திணைக்கள உதவிப் பனிப்பாளார் உடபட்ட அனைத்து தரப்பினராதும் ஒத்துழப்பினை வேண்டி நிற்கின்றோம்.

வல்வெட்டித்துறை கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்,

இழுவைப்படகு கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள்   


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
எள்ளங்குளத்தில் சாந்தன் துயிலாலயம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/02/2025 (புதன்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி புஸ்பராணி வேலுப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2025 (செவ்வாய்க்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - குமாரதாஸ் சண்முகராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2025 (செவ்வாய்க்கிழமை)
இறுதிக்கிரியை பற்றிய விபரம் - இரத்தினசாமி கணேசசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2025 (திங்கட்கிழமை)
கடற்கரையில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2025 (திங்கட்கிழமை)
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - மாணிக்கவாசகம் பூரணலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
BBC தமிழ் சேவையின் முன்னாள் ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியபிரகாசம் இயற்கை எய்தினார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
காங்கேசன்துறை - நாகபட்டினம் பயணிகள் கப்பல் இன்று மீள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2025 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - இரத்தினசாமி கணேசசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2025 (வியாழக்கிழமை)
பட்டப்படிப்புக்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரல் 2025 -
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2025 (புதன்கிழமை)
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை பரிசளிப்புவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2025 (புதன்கிழமை)
சிவகுரு வித்தியாசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டி 2025- அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2025 (புதன்கிழமை)
வல்வை நலன்புரிச்சங்கம் அவுஸ்ரேலியா கோடைக்கால ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2025 (திங்கட்கிழமை)
விழிநீர் சுமந்து,நன்றியுடன் வழியனுப்புகின்றோம் சென்றுவா ஆசானே.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
முன்னாள் சிதம்பரக் கல்லூரி உப அதிபர் குழந்தைவேல் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
ஹாட்லி கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
சிதம்பரக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை சிவன் ஆலய நித்திய பூசை நேரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2025 (சனிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் சக்திவேல் மதியழகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சந்திரவதனா ஞானச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2025 (வியாழக்கிழமை)
ஆசிரிய ஆளுமையொன்றின் நீங்காத நினைவலைகள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2025 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் இரத்தினவடிவேல் வள்ளியம்மாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2025 (புதன்கிழமை)
சந்நிதி கோவிலில் நடைபெற்ற தைப்பூசத் திருநாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2025 (செவ்வாய்க்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2025>>>
SunMonTueWedThuFriSat
      1
2
3
45678
910
11
12
13
14
15
1617
18
1920
21
22
2324252627
28
29
3031     
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai