வல்வை அம்மன் தீர்த்தத் திருவிழா, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/05/2014 (புதன்கிழமை)
கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று முற்பகல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தீர்த்த உற்சவத்திற்காக அம்பாள் சுமார் 7 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்டு சுமார் 8 மணியளவில் ஊரணி தீர்த்தக்கடற்கரையை வந்தடைந்தார்.
ஊரணி தீர்த்தக்கடற்கரையில் தீர்த்த உற்சவ நிகழ்வு சுமார் 0930 மணி வரை நீடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஊரணி தீர்த்த மண்டபத்தில் நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து அம்பாள் நெடியக்காட்டு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயம் நோக்கி திரும்பியுள்ளார்.
இன்றைய தீரத்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், வழமைபோல் இன்றும் படகுகள், வள்ளங்களும் தீர்த்தக் கடற்கரையை வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
இன்று மாலை இடம்பெறவுள்ள இந்திரவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் வல்வை பிரதேசத்தின் பருத்தித்துறை – காங்கேசந்துறை விதியின் பெரும்பாலான பகுதிகளில் வாழை மரங்கள், வண்ண மின்குமிழ்கள், மற்றும் பாரிய உருவப் படங்கள் (Cut outs) அமைக்கப்பட்டுள்ளன.
அம்பாள் ஊரணி தீர்த்தக்கடற்கரையிலிருந்துநெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து சிறிது நேரம் தங்கியிருந்து பிற்பகல் 01.30 மணியளவில் தனது ஆலயத்தை நோக்கி திரும்பவுள்ளார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.