கால் நூற்றாண்டுகளாக வல்வை சிவகுரு வித்தியாசாலையில் பணியாற்றிய முன்னாள் உப அதிபர் திரு சுப்பிரமணியம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/05/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் உப அதிபர் திரு ஆழ்வாப்பிள்ளை சுப்பிரமணியம் கடந்த 18.05.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
திரு ஆ.சுப்பிரமணியம் சிவகுரு வித்தியாசாலை 1971 ஆம் ஆண்டிலிருந்து 1995 ஆம் ஆண்டு வரை கால் நூற்றாண்டுகளாக பணியாற்றியிருந்தார்.
1971 ஆம் ஆண்டு ஆசிரியராக வல்வை சிவகுரு வித்தியாசாலையில் பணியாற்றத் தொடங்கிய இவர், 90 ஆண்டிலிருந்து 95 ஆண்டு வரை உப அதிபராக கடமையாற்றியிருந்தார்.
நாவலடி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காடு வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அவருக்கு ஆறு பிள்ளைகள் உண்டு.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.05.2014) வியாழக்கிழமை காலை 0900 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.