வல்வை ஊக்குவிற்பு குழுவினால் நடாத்தப்பட்ட வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்தாட்டச் சுற்றுத் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் இன்று காலை வல்வை ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் ரெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டுக்கழகம் மோதியது. இப் போட்டியில் ரெயின்போ விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
இரண்டாவதாக நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதியாட்டத்தில் சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகமும் ரெயின்போ விளையாட்டுக்கழகமும் மோதின. சம பலத்துடன் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முடிவில் ரெயின்போ விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.
இந்தச் சுற்றுத்தொடரின் தொடர் நாகயகன் மற்றும் இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக ரெயின்போ விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த செல்வன் ஜெகனும், சிறந்த பந்து வீச்சாளராக சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த செல்வன் மேனனும், சிறந்த களத்தடுப்பாளராக சைனிங்க்ஸ் விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த செல்வன் ஜெயக்குமாரும், சிறந்த துடுப்பாட்ட வீரராக ரெயின்போ விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த செல்வன் கவிச்செல்வனும் மற்றும் சிறந்த இளம் வீராருக்கான விருது நேதாஜி விளையாட்டுக்க்கழகத்தை சேர்ந்த செல்வன் பிரகதீஸ் க்கும் வழங்கப்பட்டது.
சிறந்த தொடர்நாயகன், இறுதியாட்டத்தில் சிறந்த வீரர் செல்வன் ஜெகன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.