நவீனசந்தை கடைத்தொகுதி கேள்வி அறிவித்தல் – சர்ச்சைக்குரிய 2 விடயங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2014 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை நவீனசந்தை கடைத் தொகுதி ‘B’ இனை வாடகைக்கு வழங்குவதற்கான கேள்வி அறிவித்தல் கடந்த 24 ஆம் திகதி யாழ் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. வல்வை நகரசபைத் தலைவர் சார்பில் வெளியிடப்பட்டிருந்த இந்த அறிவித்தலில் கீழ்வரும் 2 விடயங்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் அமைந்துள்ளதை தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளது.
1. குறித்த அறிவித்தலின் 3 ஆவது பந்தியில் “....... எதிர்வரும் 20.05.14 ஆம் திகதி அலுவலக நாட்களில் செலுத்துவதன் மூலம் கேள்விப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே காலாவதி என்பது தெளிவு, ஏனெனில் இந்த அறிவிப்பு தினக்குரல் பத்திரிகையில் 24.05.14 அன்றுதான் வெளிவந்திருந்தது.
2. 3 ஆவது பந்தியின் இறுதியில் “எந்தவொரு கேள்வியை காரணம் காட்டாது ஏற்கவோ அல்லது மறுக்கவோ கேள்விச்சபைக்கு அதிகாரம் உண்டு” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் ஒரு ஆரோக்கியமான வாக்கியமாகப் புலப்படவில்லை.
குறித்த கேள்வி அறிவித்தலை ரத்து செய்வதாக வல்வை நகரசபைத் தலைவர் திரு.ந.அனந்தராஜ் தெரிவிப்பதாக கடந்த 26 ஆம் திகதி தினக்குரலில் மீண்டும் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறித்த கேள்வி அறிவித்தலில் சிக்கல்கள் இருக்கலாம் என்பதையே கோடிட்டுக் காட்டுகின்றன.
தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த குறித்த 2 செய்திகளையும் கீழே காணலாம்.
தவறுக்கு வருந்துகின்றோம்
தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த குறித்த கேள்வி அறிவித்தல் தொடர்பான செய்தியில் 20.05.14 என்பதற்குப் பதிலாக நாம் 20.06.14 என பிரசுரித்திருந்தோம். அச்சுப்பிழையாக இருக்கக் கூடும் என்று யதார்த்தத்திற்கு அமைவாக அமைய பிரசுரித்தோம். எமது தவறுக்கு வருந்துகின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.