தீபஜோதி விளையாட்டுக் கழகத்தினரால் நடாத்தப்படும் 10 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதி ஆட்டத்திற்கு வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் தெரிவாகியுள்ளது.
நேற்று பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் வீனஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது. முதலில் துடுபெடுத்தாடிய வீனஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கும் 73 ஓட்டங்களை எடுத்திருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெடியகாடு அணி 6.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்களைப் பெற்று இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. நெடியகாடு அணி சார்பில் செல்வன் ரஞ்சித், செல்வன் விஸ்வரூபன் தலா 32, 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.