குருநகர் சங்கத்தினைப் போன்று வல்வை சங்கத்தினரும் அமைச்சுடன் தொடர்புகொண்டு தங்கள் பிரச்சினையை தீர்க்கவேண்டும் - கணேசமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 06/10/2014 (திங்கட்கிழமை)
கடற்றொழில் அமைச்சின் சட்டதிட்டங்களுக்கு அமையவே எங்களால் செயற்பட முடியுமே தவிர அதனை மாற்றவோ அல்லது புறம்பான முறையில் செயற்படவோ முடியாது என யாழ்.மாவட்ட நீரியல்வளத்துறைத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளதாக உதயன் இணையதள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மீன்பிடிப்பதற்காக இழுவைப் படகுகளை அனுமதிக்கக் கோரி இன்று வல்வெட்டித்துறையில் மீனவர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிகப்பட்டுள்ளதாவது ,
இழுவைப்படகு தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுள் ஒன்று. அதனை மீண்டும் செய்ய அனுமதிக்க மாட்டோம். இந்த நடைமுறையினை கடற்றொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தியது.
அதனை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தினைப் போலவே வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழிலாளர்களும் அமைச்சுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய பிரச்சினையை தெரிவித்து தீர்வினைப் பெற்று கொள்ள வேண்டும்.
அத்துடன் மாற்றுத் தொழில் தொடர்பிலும் அமைச்சிடமே பேசி தீர்வினைக் காண வேண்டும். எங்களால் அறிவுறுத்தலுக்கு அமையவே செயற்பட முடியும். சட்டத்தை மாற்றவோ அல்லது அதனை மீறி செயற்படவோ முடியாது.
எனினும் தடை செய்யப்பட்ட இழுவைப்படகு முறையினை பயன்படுத்தி தொழில் செய்வோர் தொடர்ந்தும் கடற்படையினரின் உதவியுடன் கைது செய்து செய்யப்படுவர் என பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார் என குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.