ரேவடிக் கடற்கரையில் வாரவாரம் நடைபெற்றுவரும் போட்டிகள், ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகளவானோர் வருகை
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் அண்மை வாரங்களாக பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியாளர்களை ஊக்குவிக்குமுகமாக பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் வரிசையில் நேற்றும் போட்டிகள் நடைபெற்றிருந்தன.
போட்டிகள் யாவருக்கும் பொதுவாக நடாத்தப்படுவதுடன், போட்டிக்களிற்கான பரிசில்களிற்குரிய செலவுகளை சில நலன்விரும்பிகள் செய்து கொண்டுள்ளனர். இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த போட்டிகள் நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பமாகியது.
1996 ஆம் ஆண்டிலிருந்து இராணுவமுகாம் பகுதியாக இந்த கடற்கரை மைதானம் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் ரேவடி விளையாட்டுக்கழக இளைஞர்களால் பூரணமாகத் திருத்தப்பட்டு மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் ஒரு சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டிருப்பதால் தற்பொழுது குறிப்பிடக்கூடிய மக்கள் இக்கடற்கரை பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.