வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கமும், வல்வெட்டித்துறை இரத்ததான சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த 79 ஆவது இரத்ததான முகாம், நெடியகாடு கணபதி மஹாலில் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் 51 பேர் குருதிக்கொடை வழங்கியிருந்தார்கள்.
நிகழ்வுக்கு வல்வை 1975 நட்புகள் அணி அனுசரணை வழங்கினார்கள்.
யாழ் போதனா வைத்தியசாலையில் குருதி வங்கியில் ஏற்பட்ட தட்டுப்பாட்டை அடுத்தே பிரத்தியேகமாக, 79 ஆவது இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.