உரிமை மறுக்கப் பட்ட ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக 40 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்த ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு தன்னை முழுவதுமாக கலைத்திருப்பதாக (Disband and Disarm) அறிவித்திருக்கின்றது.
சுதந்திர, முழு இறையாண்மையுடைய குர்திஸ்தான் நாட்டினை உருவாக்கும் நோக்கத்துடன் 1978 இல் துருக்கியில் ஆரம்பிக்கப்பட்டு துருக்கி, ஈராக், சிரியா, ஈரான், நாடுகளில் தங்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த குர்திஸ் விடுதலைப் போராட்ட அமைப்பான PKK (Kurdish Workers Party) முழுமையாக கலைக்கப் பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
சுதந்திர நாடு என்ற முழக்கத்தோடு ஆரம்பிக்கப் பட்டு, பின்னர் துருக்கியில் வாழ்ந்து கொண்டிருக்கும் குர்திஸ் மக்களின் அரசியல், கலாச்சார உரிமைகள் என்று இலக்கினை சுருக்கிக் கொண்டது.
இதன் நிறுவனத் தலைவர் அப்துல்லா ஒச்சாலன் 1999 ஆம் ஆண்டு கென்யாவில் தலைமறைவாக இருந்து இயங்கிக் கொண்டிருந்த போது மொசாட் உட்பட்ட உளவு அமைப்புக்களின் துணையுடன் கைது செய்யப்பட்டு துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தலைவரின் கைது, இலக்கில் தொய்வு, சிரியா, ஈராக் நாடுகளில் ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றங்கள், குர்திஸ் போராட்ட அமைப்புகளிடையே ஏற்படிருந்த மாற்றங்கள், PKK க்கு துருக்கிப் படைகளினால் தொடர்ச்சியாக ஏற்பட்டிருந்த பின்னடைவுகள், இழப்புக்கள் என ஒரு அழிவு நிலை விளிம்புக்கு வந்திருந்த போது தன்னைத் தானே கலைப்பதாக ஒரு நீண்ட போராட்ட இயக்கம் அறிவித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக போராடிய விடுதலைப்புலிகளுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது போல், பிகேகே க்கும் பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.