டென்மார்க்கில் இடம்பெற்ற அம்பாள் அருளாட்சி நூல் வெளியீட்டு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 16/09/2022 (வெள்ளிக்கிழமை)
வல்வை சிதம்பரக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு. ந .அரியரத்தினம் அவர்கள் எழுதிய வல்வை முத்துமாரி அம்மன் புகழ் கூறும் சிறந்த 'அம்பாள் அருளாட்சி' என்னும் நூல் வெளியீடானது டென்மார்க்கில் வல்வை ஒன்றியத்தின் ஆதரவுடன் கிரீன்ஸ்ரட் நகர தமிழர் கலாச்சாரக் கலையகத்தில் கடந்த மாதம் நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், வரவேற்புரையை தொடர்ந்து எழுத்தாளர் கே .எஸ் துரை அவர்கள் நூல் சம்பந்தமான கருத்துக்களை கூறினார்.
தொடர்ந்து நூலாசிரியர் திரு ந. அரியரத்தினம் அவர்கள் நூல் பற்றி விளக்கம் அளித்தார். நூல் வெளியீட்டை தொடர்ந்து கலந்துரையாடலுடன் விழா நிறைவு பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.