இந்த புகைப்படத்தின் இருக்கை வரிசையின் மத்தியில் அமர்ந்திருப்பவர் மறைந்த அமரர் மதிப்புக்குரிய சிதம்பராவின் முன்னைய நாள் உப அதிபரும், ஆசிரியருமான திரு.கோணநாயகம் குழந்தைவேல் அவர்கள்.
அவர்கள் சிதம்பராவின் ஆசிரியராக மட்டுமன்றி, சிதம்பராவிற்கு பெருமைசேர்த்த சிதம்பராவின் சாரணர் குழுவில் சாரண ஆசிரியராக இருந்து, சிதம்பராவிற்கு ஆற்றிய சேவை அளப்பரியது,
குறிப்பாக, எழுபதுகளின் இறுதியில் யாழ் பழைய பூங்காவில் நடைபெற்ற யாழ்மாவட்ட பாடசாலைகளுக்கிடையேயான சாரணர் குழுப் போட்டிகளில் யாழின் முன்னணிப் பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரியைப் பின்தள்ளி மீண்டும் ஒருமுறை யாழ் மாவட்டத்தின் சிறந்த சாரணர் குழுவாக சிதம்பரா தெரிவாகிய பொழுது, சிதம்பராவின் சாரணர் குழுவின் பொறுப்பு ஆசிரியராக கடமையாற்றியவர் மறைந்த அமரர் குழந்தைவேல் அவர்கள்.
சிதம்பராவின் ஆசிரியராக அமர்ந்து அவர் ஆற்றிய சேவையை நன்றியுடன் நினைவில் ஏந்துவோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.