தலைநகரை நோக்கி நகரும் அதி தீவிர தாழமுக்கம், கொழும்பில் பலத்த காற்றுடன் கடும்மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 29/11/2017 (புதன்கிழமை)
நேற்று வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கம் இன்று காலை தீவிர தாழமுக்கமாக மாறி தென்னிலங்கையின் அம்பாந்தோட்டையை நோக்கி நகர்ந்தது.
குறித்த தாழமுக்கம் மேலும் தீவிரமடைந்து அதி தீவிர தாழமுக்கியமாக மாறி (Deep depression) தற்பொழுது மேற்கு நோக்கி நகர்ந்து வருகின்றது. நண்பகல் அளவில் ரத்னபுரிக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறித்த இந்த அதி உயர் தாழமுக்கம் தற்பொழுது தலைநகர் கொழும்பை அண்மித்து நகர்ந்து செல்கின்றது.
இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாவிற்கு சென்று மேலும் தீவிரம் அடையலாம் என இந்தியா வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதே வேளை தலைநகர் கொழும்பில் தற்பொழுது (9 PM) பலத்த காற்றுடன் கடும் மழை பெய்து வருகிறது.
கீழே படத்தில் தற்போதைய அதி உயர் தாழமுக்கத்தின் இந்திய வானிலை அவதான நிலையத்தின் செய்மதிப் படத்தினைக் காணலாம்.
கீழே படத்தில் அதியுயர் தாழமுக்கம் பற்றி அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அவதான நிலையம் வெளியிட்டுள்ள - தாழமுக்கத்தின் எதிர்பார்க்கப்படும் பாதை காட்டப்பட்டுள்ளது. இப்பாதை தலைநகர் கொழும்பு ஊடாக அல்லது அதற்கு அண்மித்து அமைவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.