யாழ் - கோப்பாய் பிரதேசத்தை பூர்வீகமாகவும், வல்வெட்டிதுறை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தியநாத சுவாமி பரம்பரை ஆலய பிரதம குருவாக நீண்ட நாள் இறை சேவை செய்தவரும், யாழ்ப்பாணம் இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவராக செயல்பட்டவரும் ஆகம வைதீக சிரோன்மணி சிவஸ்ரீ பரமேஸ்வரக் குருக்கள் மனோகர குருக்கள் அவர்கள் இன்று 12/06/2025 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார். இவருக்கு வயது 73.
அன்னார் ஸ்ரீமதி கௌரிபாலா அவர்களின் கணவரும் , சிவஸ்ரீ பிரதாபன் குருக்கள், பராபரக் குருக்கள், பிரசன்னா குருக்கள், நிரூபன் குருக்கள், ஸ்ரீமதி ஷர்மினி, நிரோஜனா அவர்களின் தந்தையும் ஆவர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் கோப்பாய் GPS விளையாட்டாரங்க வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை இடம்பெற்று, தகனக் கிரியைகள் செம்மணி இந்து மயானத்தில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கான போக்குவரத்து வசதிகள் (வல்வை சந்தியிலிருந்து முற்பகல் 11 மணி) வல்வையில் செய்யப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
NAGULASIGAMANY NADANASIGAMANY (Canada)
Posted Date: June 12, 2025 at 21:03
சிவசிறி .ப.மனோகரக் குருக்கள் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வல்வை சிவனை வேண்டுகிறோம். அவரது குடும்பத்தினரின் துயுரில் நாமும் பங்கு கொள்கிறோம்.
ந.நகுலசிகாமணி, உமா.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.