யாழ் செம்மணியின் சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த மனிதப்புதைகுழி அகழ்வுப் பகுதியில் இதுவரையில் மொத்தமாக 19 முழுமையான மனித என்புத்தொகுதிகள் (Human skeletal remains) அடையாளம் காணப்பட்டு மீட்க்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாசி மாதம் 20 ஆம் திகதி நல்லூர் பிரதேசபை ஊழியர்கள், கட்டட வேலை ஒன்றுக்காக குறித்த பகுதியை துப்பரவு செய்யும் பொழுது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பொலிஸாரினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, யாழ் நீதிமன்ற நீதிபதி திரு.A.ஆனந்தராஜா ஆவர்களினால் குறித்த அகழ்வுப்பணியை மேற்கொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொல்லியற்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ (Professor of Archaeology Raj Somadeva) தலமையிலான தொல்லியற் துறை நிபுணர்கள் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தகட்ட அகழ்வு நடவடிக்கைகள் இரண்டுவாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.