யாழ்ப்பாணம் நாயன்மார் காட்டுகுளம் புனரமைப்பு மாதிரி திட்ட வரைபை இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் வெளியிட்டு வைத்ததுடன், அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உட்பட்ட குளங்களை தூர்வாரி, அழகு படுத்தும் செயற்திட்டங்கள் வரிசையில், அதன் ஒரு அங்கமாக யாழ் மாநகர சபையின் தூய அழகிய நகர துரித அபிவிருத்தி திட்டத்தின் மற்றொரு செயற்பாடாக நாயன்மார்கட்டு குளம் புனரமைக்கப்படவுள்ளது. அந்நிலையில் குளத்தின் புனரமைப்பு மாதிரி திட்ட வரைபை முதல்வர் மக்கள் பார்வைக்கு வெளியிட்டு வைத்துள்ளார்.
இதேவேளை கடந்த வாரம் யாழ் நகர் மத்தி பகுதியில் அமைந்துள்ள ஆரிய குள புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. அதன் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்தது கடந்த 2 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குளங்கள் புனரமைப்பு பணிகளுக்கு தியாகி அறக்கொடை நிறுவனர் நிதி பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
குறித்த நாயன்மார் காட்டுகுளம் ஆனது யாழ் மானநகர சபை எல்லைக்குள் செம்மணி வீதிக்கு அண்மையாக, நாயன்மார் வீதி மற்றும் கனகரத்தினம் வீதி சந்திக்கும் இடத்தில் யாழ்பாணம் SOS குழந்தைகள் காப்பகம் (SOS Children Village) க்கு முன்பாக அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.