கராத்தே போட்டிகளில் பருத்தித்துறை தற்காப்புக் கலையகம் வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2021 (வியாழக்கிழமை)
கடந்த 16/12/2021 அன்று முல்லைத்தீவு உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வடமாகாண கராத்தே காட்டா குமிட்டே போட்டிகளில் யாழ்மாவட்ட பெண்கள் ஆண்கள் அணிகள் வெற்றிக் கிண்ணத்தைத் தமதாக்கியது. குறித்த போட்டிகளில் பருத்தித்துறை தற்காப்புக் கலையகம் 4 தங்கம் மற்றும் 4 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றன
இதேவேளை 'சிறீலங்கா கராத்தே சம்மேளனம்' அண்மையில் நடாத்திய இணையவழி காட்டாப் போட்டியில்
பருத்தித்துறை தற்காப்புக் கழக மாணவர்கள் 1 தங்கம், 3 வெள்ளி 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.
இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற கராத்தே வீர, வீராங்கனைகளை, அவர்களின் ஆசிரியர் கராத்தே ஷிகான் திரு.இரத்தினஜோதி அவர்களுடன் நிற்பதனை கீழே படங்களில் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.