வல்வையில் மனைவி வழங்கிய முறைப்பாட்டினால் கணவனும் மகனும் வாள்களுடன் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2022 (திங்கட்கிழமை)
மனைவி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கணவனும் மகனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரு வாள்கள் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் வல்வையில் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வீட்டில் கணவனால் தகராறு ஏற்படுவதாக மனைவி வல்வெட்டிதுறைப் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், குறித்த வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு இரு கூரிய வாள்களை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் கணவன் மற்றும் மகனை கைது செய்தனர். (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.