ஓய்வு பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளார் திரு.R.S.சிவசுப்ரமணியம் (S.L.A.S, JP) அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.
பிற்பகல் சுமார் 02:00 மணியளவில் அன்னாரின் கொழும்பு தெகிவளை இல்லத்தில் சமயக் கிரியைகள் நடைபெற்று, இறுதி ஈமைக்கிரியைகள் பிற்பகல் 04:30 மணியளவில் கொழும்பிலுள்ள கனத்தை இந்து மயானத்தில் நடைபெற்றது. இறுதி நிகழ்வில் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
R.S என்று அழைக்கப்படும் திரு.R.S.சிவசுப்ரமணியம் (S.L.A.S, JP) கடந்த 13 ஆம் திகதி சுமார் 23:00 மணியளவில் சிலாபம் மருத்துவமனையில் காலமானார். இவர் கடந்த இரு மாதங்களாக சுகவீனமுற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
வல்வெட்டிதுறைச் சேர்ந்த திரு.R.S அவர்கள் ஒரு SLAS தர அதிகாரி, ஒரு சமாதான நீதவானும் கூட. இலங்கை அரசின் பல உயர் பதவிகளில் பதவி வகித்தவர், அதிலும் குறிப்பாக சுகாதார அமைச்சின் செயலாளராகவும், பின்னர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளாராகவும் கடமையாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.