மீண்டும் வல்வை நகரசபைத் தவிசாளாராக செல்வேந்திரா தெரிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/12/2021 (புதன்கிழமை)
வல்வை நகரசபை தவிசாளருக்குரிய வாக்கெடுப்பு இன்று முற்பகல் நடைபெற்றது. இவ்வாக்கெடுப்பில் சுஜேட்சைக் குழுத் தலைவர் செல்வேதிரா ஏகமனதாக மீண்டும் வல்வை நகரசபைத் தவிசாளாராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இன்றைய தெரிவில் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் வெளிநடப்புச் செய்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.
கடந்த 17 மற்றும் 30 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வல்வை நகரசபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு. வாக்கெடுப்பில் சுஜேட்சைக் குழுவின் நால்வர், ஈ.பி.டி.பி இருவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருவர் என பேர் ஆதரவாகவும், கூட்டமைப்பின் 7 பேரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 பேரும் எதிராக வாக்களித்ததால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதேச மக்களின் விருப்பைக் கவனத்திற் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ரெலோ மற்றும் சுஜேட்சைக் குழுவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்து இடப்பட்டது. இதன் பிரகாரம் எதிர்வரும் 5 மாதங்கள் திரு.செல்வேந்திரா அவர்களும், அதன்பின்னர் கூட்டமைப்பின் சார்பில் ரெலோவினால் நியமிக்கப்படும் ஒருவர் தெரிவாகவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Rajkumar Arumugam (Canada)
Posted Date: December 16, 2021 at 03:20
நீண்ட காலத்திற்குப்பின்பு நல்ல மனிதர் ஒருவர் நகரசபைத் தலைவராக வல்வைக்கு.
வாழ்த்துகள்.
Subas (Danmark)
Posted Date: December 16, 2021 at 00:17
வல்வை நகரசபைத் தலைவராக திரு செல்வேந்திரா அவர்கள் தெரிவு செய்யப் பட்டது மிகச் சரியான முடிவு. அவ்ருக்கு எமது உளமார்ந்த நல் வாழ்த்துக்கள். பதவிக் காலம் முடியும் வரை அவரே இருப்பதுதான் சிறப்பு.
அன்புடன்
வல்வை வ. சுபாஸ்
டென்மார்க்
NAGULASIGAMANY NADANASIGAMANY (Canada)
Posted Date: December 15, 2021 at 22:25
திரு.செல்வேந்திரா அவர்கள் நகரசபைத் தலைவராக தெரிவு செய்யப் பட்டமை பாராட்டுகின்றோம். ஒருவருடத்திற்கு அவரையே தலைவராக இருப்பது வல்வைக்கு சிறப்பு, இளைஞர்களுக்கு வரும் காலத்தில் நல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன. முதல் பட்டினசபைத் தலைவராக ஐ.திருப்பதி அவர்கள் இருந்தார். இரண்டாவதாக எனது தந்தை ச.நடனசிகாமணி அவர்கள் இருந்தார். அவரை அடுத்து எஸ்.எஸ்.சுந்தரலிங்கம் அவர்கள் இருந்தார். அந்தநாட்களில் மும்முனைப் போட்டி இருக்கும். ஆனால் தேர்தல் முடிந்தபின்பு எல்லோரும் அண்ணன், தம்பி போன்று பழகிக் கொள்வார்கள். அந்தப் பண்பு வல்வையில் தொடரவேண்டும். முன்போல் வணிக வழங்கள் பெருகி வருமானம் பெறக்கூடிய நகரசபையாக வளர வாழ்த்துக்கள்.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: December 15, 2021 at 20:16
சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி
சோ.செ.தெய்வச்சந்திரன் (uk)
Posted Date: December 15, 2021 at 15:36
பிரதேச மக்களின் விருப்ங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது என்பது வல்வெட்டித்துறை வரலாறு இன்னும் சிலவற்றை புதுப்பிக்கும். நகரசபை குழுவினருக்கு புலம்பெயர்ந்த ஊர் மக்கள் சார்பில் வாழ்த்துக்களும் நன்றிகளும்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.