தென்மராட்சி பிரதேச செயலகத்தை (Thenmaradchi Divisional Secretariat) இரண்டாக பிரிப்பதற்கான திட்ட வரைவுகளை எல்லை நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதியிடப்பட்டு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளரிடம் இருந்து குறித்த கடிதம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பரந்துபட்ட பிரதேசத்தை உள்ளடக்கிய தென்மராட்சிப் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக பல தரப்பினரிடமும் மக்களாலும், புத்திஜீவிகளாலும் முன்வைக்கப்பட்டுவந்தது.
மக்களின் கோரிக்கையை ஏற்று தென்மராட்சி பிரதேசசெயலகத்தை இரண்டாக பிரிப்பிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது எல்லைநிர்ணயக் குழுவின் அனுமதிக்காக சென்றுள்ள நிலையில் எல்லைநிர்ணயக் குழு தென்மராட்சியை பிரிப்பதற்கான எல்லை வரைபுகளை அனுப்புமாறு மாவட்ட செயலரைக் கோரியுள்ளது.
தற்போது அறுபது கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள தென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாக பிரியும் பட்சத்தில் தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் (Thenmaradchi East divisional-secretariat) மற்றும் தென்மராட்சி மேற்கு பிரதேச செயலகம் (Thenmaradchi West divisional secretariat) என இரண்டாக பிரிவடையும். தென்மராட்சி கிழக்கு 28 கிராம அலுவலர் பிரிவுகளாகவும்,தென்மராட்சி மேற்கு 32 கிராம அலுவலர் பிரிவுகளாகவும் பிரித்து கடந்த காலத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கண்டவாறு பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.