மலையக சிறுவர் இல்லத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/12/2021 (சனிக்கிழமை)
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் பதுளையில் அமைந்துள்ள ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் மலையக சிறுவர் இல்லத்திற்கு றூபா 10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிதியை தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம நிறுவனர் திரு.மோகனதாஸ் அவர்கள் கடந்த 6 ஆம் திகதி ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் மலையக சிறுவர் இல்ல நிர்வாகிகளிடம் வழங்கி வைத்தார்.
ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் மலையக சிறுவர் இல்லத்திற்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், கட்டட பணிக்குரிய ஒரு பகுதி நிதியாக குறித்த அன்பளிப்பு இடம்பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.