வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
15 தினங்கள் தொடர்ந்து நடைபெறும் மகோற்சவத்தின் வேட்டைத் திருவிழா 09 ஆம் திகதியும், பாம்புத் திருவிழா 10 ஆம் திகதியும், பூத்தண்டிகைத்திருவிழா 11 ஆம் திகதியும், பூங்காவனத்திருவிழா 12 ஆம்திகதியும், புலிவேட்டைத் திருவிழா 13ஆம் திகதியும், சப்பரத் திருவிழா 14ஆம் திகதியும், தேர்த்திருவிழா 15 ஆம்திகதியும், தீர்த்தத் திருவிழா 16 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
தீர்த்தத்திருவிழா அன்று அம்பாள் தீர்த்தமாடிய பின்னர் நெடியம்பதி விநாயகர் ஆலயம் சென்று , அங்கிருந்து உடன் அம்பாள் தமது ஆலயம் நோக்கி திரும்புவார்.
பகல் வசந்த மண்டப பூசைகள் 08.30 மணிக்கும், இரவு வசந்தா மண்டப பூசைகள் மாலை 05.30 மணிக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.