வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் மாலை நேர வகுப்புகள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 14/06/2025 (சனிக்கிழமை)
மாணவர்கள் தமது ஆரம்பகல்வியை சிறப்பாகவும் செறிவாகவும் பெற்றுக் கொண்டால்தான் உயர்கல்வியில் சிறப்பு பெறுபேறுகளை பெற்று கொள்ளமுடியும்.அதனை அடிப்படையாக வைத்து
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் முப்பது மாணவ மாணவிகளுக்கு சிறப்பு மாலை நேர வகுப்புகள் ஆரம்பமாகி உள்ளன. இந்த வகுப்புகள் சிறப்பு அனுபவமிக்க ஆசிரியையால் பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்துக்கான அனைத்து நிதி மற்றும் வள உதவிகளை ' கருணை ஊற்று ' வழங்கி முன் நடத்துகின்றது. கருணை ஊற்று அறக்கட்டளை என்பது அமரர் திருமதி சோதிலிங்கம் முத்துலட்சுமி நினைவாக ஆரம்பிக்கட்ட ஒரு தொண்டு அமைப்பாகும். இந்த கருண ஊற்று அமைப்பு ஏற்கனவே கடந்த நாலு வருடங்களாக பரந்தன் சிவபுர கிராமத்தில் மாலை நேரவகுப்புகளையும் மாணவ மாணவிகளுக்கு இரவு உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாலை நேர வகுப்புகளுக்கான ஆரம்ப அறிமுக நிகழ்வு செவ்வாய்கிழமை 10.06.2025 அன்று பாடசாலை மண்டபத்தில் பாடசாலை ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.