Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த சிதம்பராக்கல்லூரி 58 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 2 விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களை எடுத்து நெல்லியடி மத்தியமகா வித்தியாலையம் முதலாவது போட்டியில் வெற்றிபெற்றது.
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நாளை திங்கள் கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
வல்வை சிதம்பரக்கல்லூரியும், நெல்லியடி மத்தியமகா வித்தியாலமும் மோதும் மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுதொடர் ஏதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை நடைபெறவுள்ளது.
வியஜதசமி தினத்தை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மண்டபத்தில் கலை மற்றும் ஏடு தொடக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. கலை நிகழ்வில் பாலர்களின் ஆடல், பாடல், கவிதை, பேச்சு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியில் கடந்த பல ஆண்டுகளின் மேலாக இயங்க முடியாத நிலையிலிருந்த பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.
வல்வை சிதம்பராக் கல்லூரியின் மாணவ மாணவிகளும், வல்வை மகளிர் பாடசாலையின் மாணவிகளும் இப்பரீட்சைக்கு, உட்டுப்பிட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலையில் தோற்றமளித்தனர்.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் (VEDA) 16.10.2012 அன்று தொடக்கம் 24.10.2012 வரை நடைபெறும் நவராத்திரிநிகழ்வினை தரம் - 09, தரம் - 10, தரம் - 11 மாணவர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் யாழ் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் நேற்றைய போட்டிகள் தொடர் மழை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
வழமையை விட சற்று முன்னதாக ஆரம்பித்திருக்கும் வடகிழக்கு பருவப் பெயர்சிக் காலநிலையால்,
நேற்றும், நேற்றைய முன்தினமும் யாழ் தீபகற்பத்தின் பல இடங்களில், வல்வெட்டித்துறை உட்பட, மழை பெய்திருந்தது.
வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டு கழகத்தினால் யாழ் மாவட்டத்தின் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருகின்றது.
சக்தி விரதமாகிய நவராத்திரி விழா அக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமானது. வருகின்ற 23 ஆம் திகதி சூரன்போரும், 24 ஆம் திகதி மானம்புத் திருவிழாவும் வல்வை நெடியகாடு பிள்ளையார் கோவில் வீதியில் நடை பெறவுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.