காங்கேசன்துறை - நாகபட்டினம் பயணிகள் கப்பல் இன்று மீள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2025 (சனிக்கிழமை)
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சிவகங்கை என்ற பெயருடைய கப்பல் சேவையானது கப்பல் சேவை மீள இன்றைய தினம் - 22 ஆம் திகதி ஆரம்பமானது.
கடந்த ஆண்டு 2024 ஓகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. எனினும் புயல், மழை, கடல் சீற்றம் காரணமாக நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இன்று 22 ஆம் திகதி தொhடங்கப்பட்டது. 83 பயணிகளுடன் காலை புறப்பட்ட சிவகங்கை கப்பலானது மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
அத்துடன் இன்று 89 பயணிகள் காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணித்தனர்.
இந்த கப்பல் சேவையானது செவ்வாய்கிழமை தவிர்ந்த வாரத்தில் 6 நாட்கள் சேவையில் ஈடுபடவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.