பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களை பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ முன்வைத்த யோசனைக்கு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, பாராளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களை பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டவுள்ளது.
COVID சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டிருந்தபோதும், பாராளுமன்ற அமர்வு நாட்களில் பார்வையிடுவதற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.
இதனால் பாடசாலை அதிகாரிகள் தமது விண்ணப்பத்தை படைக்கல சேவிதருக்குக் கடிதம் மூலம், 0112777473 அல்லது 0112777335 எனும் தெலைநகல் மூலம் அல்லது http://www.parliament.lk என்ற இணையவழியூடாக சமர்ப்பிக்க முடியும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.