பூட்டி இருந்த வீட்டை திறந்து நகைகளை திருடி விட்டு மீளவும் கதவை பூட்டி சென்ற திருடர்!- வல்வெட்டித்துறையில் சம்பவம்
வல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடிவிட்டு மீளவும் கதவை மூடி திருடர் தப்பித்துள்ளார்.
வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்துக்கு மாலை 5 மணிக்குச் சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
11 பவுண் தாலிக்கொடி, 5 பவுண் காப்பு மற்றும் 19 ஆயிரம் ரூபாய் பணம் என்பனவே திருட்டுப்போயுள்ளன என்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது என்று வல்வெட்டித்துறை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மதிலால் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்த வர் முன் கதவைத் திறந்து நகைகளைத் திருடிவிட்டு மீளவும் முன் கதவை மூடி விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வல்வெட்டித்துறை காவல் நிலைய தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மேற்கண்டவாறு இன்றைய தினசரிப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.