பெருமாளுக்கே உரிய மிக முக்கியமான விரத நாளாக கருதப்படுவது வைண்ட ஏகாதசி திருநாளாகும். வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபட்டாலே, வருடத்தின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபட்ட பலனை பெற முடியும்.
வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது மூன்று நாட்கள் இருக்கக் கூடிய விரதம் ஆகும். அதாவது தசமி திதியில் துவங்கி, ஏகாதசி திதியில் உபவாசமாக இருந்து, துவாதசி திதியில் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி வருகிறது.
ஜனவரி 09ம் தேதி பகல் 12.03 வரை தசமி திதி உள்ளது. அதற்கு பிறகு ஏகாதசி திதி துவங்கி, ஜனவரி 10ம் தேதி காலை 10.02 வரை உள்ளது. துவாதசி திதி ஜனவரி 11 ம் தேதி காலை 08.13 ம் தேதி வரை உள்ளது.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஜனவரி 09ம் தேதி அன்று பகல் பொழுதுடன் உணவு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதத்தை துவங்கலாம்.
அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவை எடுத்துக் கொள்ளாமல் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். ஜனவரி 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை கண்டு தரிசித்த பிறகு, அன்று பகல் பொழுதில் தூங்காமல், உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை தொடர வேண்டும். ஜனவரி 10ம் தேதியன்று இரவு கண் விழித்து, ஜனவரி 11ம் தேதி காலை பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.